General Secretary - Election Campaign Management @tvkvijayhq | Founder - @thevocofficial | President - @BFI_basketball | President - @TNBAhub | GS - @TNOA_Offi

TamilNadu
Joined November 2022
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கோவையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவி, நேற்று ஞாயிறு இரவு, கோவை விமான நிலையம் அருகே தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் அங்கே வந்த மூன்று பேர் காரில் அமர்ந்திருந்த அந்த மாணவியின் நண்பரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர். பிறகு, அதே பகுதியில் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு, மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் தனது செல்போன் மூலமாக பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெண்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத அளவிற்கு, பாதுகாப்பில்லாத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு சான்றாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பொதுவெளியில் அவர்கள் அச்சமின்றி பயணிக்கின்ற பாதுகாப்பான சூழலை ஒரு அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது கடமை. ஆனால், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை தொடங்கி, தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்கு இந்த அரசின் மீதான அச்சத்தைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச் செயல்களுக்குக் காரணமாக, பெரும்பாலான வன்முறைகளுக்குக் காரணமான மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடுகள் தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ, அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் பாதிக்கப்பட்ட மாணவி அவர்கள் விரைவில் நலம்பெறவும், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்து, சட்டத்தின் முன் அவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்று போற்றும் தமிழ் மக்களுக்கான தனி மொழிவாரி மாநிலமான நம் மாநிலம் பிறந்த நாள் இன்று. இதற்காகப் போராடிய எல்லை போராட்ட வீரர்களையும், தமிழ் மொழி தனித்துவத்திற்காக குரல் கொடுத்த தியாகிகளையும் இந்நாளில் நினைவுகூருவோம். மதராஸ் மாகாணம் என்று அறியப்பட்ட இந்த தமிழர் நிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர்சூட்டி மகுடம் அணிவித்தார் தமிழக அரசியலின் தலைமகன் பேரறிஞர் அண்ணா. நம் தமிழ்நாட்டின் அடையாளமான சுயாட்சி சிந்தனைகள், இருமொழிக் கொள்கை, மதநல்லிணக்க அரசியல், மாநில உரிமைகள் ஆகியவற்றை மீட்டெடுப்போம். மக்கள் விரோத, கபட நாடக திமுக-விடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம். 2026-ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்று தமிழ்நாடு நாளான இன்று உறுதியேற்போம்!
8
802
17
3,171
நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர், மக்கள் நல அரசியலுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர், தேசம் போற்றும் தலைவராக உயர்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவர் திருவுருவச் சிலைக்குக் கழக துணைப் பொதுச்செயலாளர் @imrajmohan அவர்கள், மாவட்ட கழக செயலாளர் திரு. கே.வி. தாமு அவர்கள் மற்றும் கழகத் தோழர்கள் ஆகியோரோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
'வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்' என்ற அறிவார்ந்த நிலைப்பாட்டுடன், சுதந்திரப் போராட்டத்தில் வீரத்துடன் போராடி நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து வலிமைமிக்க போராட்டத்தை நடத்தியவர். அரசியல் களத்தில் விவேகத்துடன் பங்கேற்று அனைவருக்குமான தலைவராக விளங்கியவர். தேசத்தின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். மத நல்லிணக்கத்தைப் பேணியவர். மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, மக்கள் போற்றும் மகத்தான தலைவராக இருந்த பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் புகழைப் போற்றுவோம்.
'கனவு காணுங்கள்! கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல, உங்களைத் தூங்கவிடாமல் எது செய்கிறதோ அதுதான் கனவு' என்ற டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து, மீனவ கிராமத்தில் அரசுப் பள்ளியில் பயின்று, நாட்டின் மிகச்சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளராக உயர்ந்தவர். அவரது முன்னேற்றமும் சாதனைகளுமே என் போன்ற எளிய பின்புலத்திலிருந்து வந்த பலருக்கும் ஊக்கமாக இருந்தது. நாட்டின் வளர்ச்சி, கல்வியின் சிறப்பு, இளைஞர்களின் முன்னேற்றம் என ஆதர்ச சிந்தனையாளராக இருந்தவர். ஒரு மக்கள் ஜனாதிபதியாக இருந்து 'இந்தியா வல்லரசு' என்ற மிகப்பெரும் இலட்சியத்தைச் சுமந்த அப்துல் கலாம் அவர்களின் கனவை அவர் பிறந்தநாளான இன்று நிறைவேற்ற உறுதியேற்போம்.
4
885
24
3,714
கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும். எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தகைய அதிகார வலிமையை எதிர்கொண்டாலும், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம். வாய்மையே வெல்லும்! வாய்மையே வெல்லும்! வாய்மையே வெல்லும்!
"அகிம்சை என்பது ஒரு மனிதனின் தலையாய கடமை" என்ற அறம் வாய்ந்த போராட்ட குணத்தைப் போதித்தார் மகாத்மா காந்தி. அந்நிய பிரிட்டிஷ் ஆட்சியை உண்மையும் மேன்மையும் கொண்டு வெல்ல முடியும் என்று வாழ்ந்துகாட்டினார். மதச்சார்பின்மை எனும் மகத்தான அரசியலையும், சமூக நல்லிணக்கம் என்ற சமத்துவ உணர்வையும், ஜனநாயகம் என்ற உன்னத கடமையையும் போதித்த மகாத்மா காந்தி பிறந்தநாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம். அவரின் அனைவருக்குமான அரசியல் வழியில் பயணிப்போம்.
உண்மையும் நீதியும் ஒருநாள் வெல்லும்!
என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன். ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை. இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன். துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!'
திருவாரூர் தங்களோட கோட்டை, தாமே அதன் மன்னர்கள், தமது வாரிசுகளே அதன் இளவரசர்கள் என நினைத்துக்கொண்டு மக்களை அடிமைகளாக நினைத்து அதிகாரம் செய்து வந்தது திமுக தலைமை குடும்பம். அந்த குடும்பத்தின் பிரதிநிதிகளாக தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டு இந்த திருவாரூர் மண்ணின் பண்ணையார்களாகப் பவனி வந்தவர்களுக்கு எதிராக, மக்கள் தலைவர் திரு. விஜய் அவர்கள் மீது கொண்ட அன்பாலும் நம்பிக்கையாலும் தன்னெழுச்சியாக திரண்டார்கள் மக்கள். மக்களின் புதிய எழுச்சியும், மக்கள் தலைவரின் பிரசாரமும் வரும் தேர்தலில் அந்த மன்னர்களின் மகுடத்திற்கே ஆபத்தாக மாறியதைக் கண்டு அவர்களை பதற வைத்துள்ளது. இனி, திருவாரூர் என்றாலே தேருக்குப் பிறகு வெற்றித் தலைவரின் பிரசாரத்தில் மக்கள் காட்டிய எழுச்சியையே வரலாறு பேசும்!
பணத்தாலும் அதிகாரத்தாலும் அனைத்தையும் வாங்கிவிடலாம் என்று நினைத்த ஆளுங்கட்சியினர், தன்னெழுச்சியாக திரளும் மக்கள் சக்தியைப் பார்த்து ஆடிப்போயுள்ளனர். தம்மை யாராலும் வெல்ல முடியாது என்று தப்புக் கணக்குப் போட்டவர்களுக்கு, ஒரு தசாப்தத்திற்கு பிறகு உருவாகியிருக்கும் மக்கள் திரட்சி, அடுத்து நடக்கவிருக்கும் ஜனநாயக புரட்சியின் மூலம் பதில் சொல்லும். அதில் ஒரு பகுதியாக, மக்களில் ஒருவராய், மக்களுக்கானவராய், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மக்களைச் சந்திக்க வருகிறார் மக்கள் தலைவர். உங்க விஜய் நா வரேன்! வாகைசூடும் வரலாறு திரும்புகிறது! வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு! (1/2)
தமிழ்ச் சமூகத்தின் அறிவுச் சுடர், ஏற்றத்தாழ்வு அநீதிகளுக்கு எதிரான உரிமைக் குரல், சமதர்ம சமூகநீதி மற்றும் உலகப் பொது அறத்தைப் பிரசாரம் செய்த சமூக சீர்திருத்த சிந்தனையாளர் தந்தை பெரியார் பிறந்தநாளான இன்று, சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு. @BussyAnand அவர்கள், கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் திரு. @arunrajkg அவர்கள், துணைப் பொதுச்செயலாளர் திரு. @CTR_Nirmalkumar அவர்கள், கொள்கை பரப்பு செயலாளர் திரு. @imrajmohan அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஆகியோர் சேர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மரியாதை செலுத்தினோம்.
3
765
6
2,779
மக்கள் சக்தி வெல்லட்டும்!
தந்தை பெரியார் தமிழ் நிலத்தின் கொள்கை அரண். சாதியவாதம் மற்றும் மதவாதத்திற்கு நிரந்தர பகைவர். பெண் விடுதலை சிந்தனையின் பேராளுமை. 'பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டென்ற கொள்கையை மறுக்கிறோம்' என்ற கலகக்குரல். சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை என்ற சிந்தனையை வாழ்நாள் முழுக்க பிரசாரம் செய்த வழிகாட்டி. ஆதிக்க அதிகார மையங்கள் தோன்றிய அனைத்து விதத்திலும் அதன் அடித்தளத்தைத் தகர்க்கப் போராடிய இலட்சியத் தலைவர். மானுட சமத்துவத்தின் முதல்படி ஆண்-பெண் சமமென்ற சமூகம் உருவாக வேண்டும்; பெண் விடுதலை என்பது ஆண்கள் கொடுக்கும் சலுகை அல்ல; அது அவர்களின் உரிமை என்று மேம்பட்ட சிந்தனையை வழங்கியவர். பெரியார் நிறுவிய சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நினைவில் வாழ்ந்துவருகிறோம் நாம். ''சாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காக சேர்க்கப்படும் பட்டங்களை கைவிடவேண்டும்'' என்று சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டில் தீர்மானம் இயற்றினார் பெரியார். ஒழுக்கம், கட்டுப்பாடு, பழக்கவழக்கம், விதி போன்ற கட்டாயத்தின் பேரில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இருக்கின்றன. அது அவர்களின் சுதந்திர சிந்தனைகளை மறுக்கின்றன. இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் இயற்கையான மனித உணர்வுக்கு விரோதமானது என்று பிரசாரம் செய்தார் பெரியார். அனைத்திலும் அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்றார். "வயதில் அறிவில் முதியார், நாட்டின் வாய்மைப் போருக்கு என்றும் இளையார்'' என்று பெரியாரைப் பற்றிக் குறிப்பிட்டார் பாவேந்தர். சாதி மற்றும் மதப் பெரும்பான்மைவாதத்திற்கு எதிராக கொள்கை அளவில் என்றும் இளமையாகப் போரிட்டுக்கொண்டிருக்கும் பெரியாரை கொள்கைத் தலைவராக முன்னிறுத்தி, அரசியல் ஆயுதமாகக் கொண்டு பயணிக்கும் நாம், பெரியாரின் சுயமரியாதை கனவை முழுவதுமாக நிறைவேற்றுவோம்; பெரியாரின் பிறந்தநாளான இன்று அதற்காக உறுதியேற்போம்.
3
942
9
2,968
மக்களாட்சியை மீட்டெடுக்க! தம்பி வா... தலைமையேற்க வா!!
அண்ணா.. அண்ணா.. அண்ணா! தந்தை பெரியாரின் கனவுகளை தேர்தல் அரசியல் என்ற மக்களாட்சியின் மூலம் நடைமுறைப்படுத்த முடியும் என்று உணர்த்திய ஆதர்ச தலைவரானார் பேரறிஞர் அண்ணா. பண்ணையார்களிடமும், ஆதிக்கவாதிகளிடமும் இருந்த அரசியல் அதிகாரத்தை சாமானிய மக்களிடம் ஒப்படைத்த ஒப்பற்றத் தலைவர். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வைக் கற்பித்த சமூகத்தில், பிறப்பால் ஒரு தலைவன் உருவாகக் கூடாது என்று போராடியது மட்டுமின்றி, வென்றுகாட்டிய மக்களாட்சி நாயகர். அண்ணாவின் ஆட்சி, தமிழ்நாடு சுயாட்சி அடையாளத்தின் சாட்சி! இந்தியாவில் இருந்த ஒற்றைத்தன்மை அதிகாரம் செயல்படுத்தி வந்த மேலாதிக்க கருத்துகளுக்கும் எதிராக, ஒரு மாநிலக் கட்சி சமத்துவம், சமூகநீதி, மாநில சுயாட்சி போன்ற கொள்கைகளைப் பேசி ஆட்சியமைக்க முடியும் என்று ஒட்டுமொத்த நாட்டிற்கும் வழிகாட்டிய தலைவர் அண்ணா. அண்ணாவின் அந்த ஜனநாயகப் புரட்சியே பிறகு வந்த இந்திய அரசியலுக்கு அடித்தளம் அமைத்தது. ''அரசியல் ஆர்வம் குன்றிடும் நாளே ஜனநாயக முறை அழிந்திடும் நாள்!'' என்று அறிவுறுத்திய அண்ணாவின் வார்த்தைகளே என்னை தேர்தல் அரசியல் சிந்தனை நோக்கிப் பயணிக்க வைத்தன. அந்தவகையில், அண்ணா எனது அரசியல் ஆசிரியராக, செயல்திட்ட குருவாக இருக்கிறார். தமிழ்நாட்டின் தனித்துவ சமூகநீதி கொள்கைகளையும், தலைவணங்கா மொழி கொள்கைகளையும் எந்த சக்தியாலும் வீழ்த்திட முடியாது, அது அண்ணா நமக்கு அளித்த அரண். சாமானியர்களுக்கான அரசை நிர்வகித்து, எளிய மக்களின் உரிமையை நிலைநாட்டிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம். அண்ணா வழியில் புதிய அரசியல் அரசியலை உருவாக்குவோம்! ''உன்னால் முடியும் தம்பி!'' என்ற அண்ணாவின் அன்பு கட்டளைகளே இன்றும் நம்மைக் களத்தில் இயங்க வைக்கிறது. அண்ணா இன்னும் மறையவில்லை, கொள்கை வழியில் உயிர்ப்புடன் இருக்கும் அவரது மக்கள் திரள் பாதையில் உத்வேகத்தோடு பயணிப்போம். அண்ணாவின் மாபெரும் கனவுகளை மீட்டுருவாக்குவோம்!
4
841
8
3,187
கொள்கைத் தலைவர்களையும் மாநில உரிமைகளின் முன்னோடிகளையும் கண்ட தமிழ்நாடு, அந்த அடிப்படை அரசியலிலிருந்து விலகிய காலத்தில் எல்லாம் மாபெரும் புரட்சியைக் கண்டது. 1967-ம் ஆண்டின் சாமானிய புரட்சி, 1977-ம் ஆண்டின் சரித்திரப் புரட்சி என்ற வரிசையில் 2026-ம் ஆண்டு மக்கள் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில் ஜனநாயகப் புரட்சியைச் சந்திக்க உள்ளது. மக்களுக்காக, மக்களில் ஒருவராக, மக்கள் தலைவர் நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கவுள்ள மக்கள் சந்திப்பு, மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்போகிறது. 'உங்க விஜய் நா வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு!' என்ற பிரசார முழக்கம் இனி உலகம் முழுக்க ஒலிக்கட்டும்!